தென்காசி மாவட்டத்தில் சட்டக்கல்லூரி மக்கள் மகிழ்ச்சி

by Editor / 02-11-2022 09:36:41pm
தென்காசி மாவட்டத்தில் சட்டக்கல்லூரி மக்கள் மகிழ்ச்சி

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் தங்கப்பழம் கல்வி குழுமத்தின் சார்பில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன.இதன் தொடர்ச்சியாக தற்பொழுது  தென் மாவட்ட  மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்த சட்டக் கல்லூரியும் தங்கப்பழம் கல்வி குழுமத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு திறப்புவிழா காண உள்ளது.இந்த நிகழ்வில் தமிழக சட்டப்பேரவை தலைவர் எம். அப்பாவு,சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் பி ஆகாஷ், உயர்நீதிமன்ற நீதிபதிகள்.திருமதி வி. பவானி சுப்பராயன், திருமதி ஆர் தரணி,திருமதி ஸ்ரீமதி  ஆகிய மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகளும் விழாவில் பங்கேற்க உள்ளனர் இதற்கான ஏற்பாடுகளை தங்கப்பழம் கல்வி குழும  நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via