வெப்ப காலம் முடிந்து பருவமழை துவங்கப் போகுது..

by Editor / 25-05-2023 08:06:19am
வெப்ப காலம் முடிந்து பருவமழை துவங்கப் போகுது..

இந்தியா முழுவதும் நிலவி வந்த வெப்ப அலை ஓய்ந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது:
இந்தியா முழுவதும் நிலவி வந்த வெப்ப அலை ஓய்ந்தது.இனி வெயிலின் தாக்கம் குறையும்.இதன் காரணமாக, ராஜஸ்தான், பஞ்சாப், டில்லி, உ.பி., அரியானா, சத்தீஸ்கரில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது.அடுத்த 2 நாட்களில் அந்தமான் கடற்பகுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கும். தமிழகத்திலும் மழை பெய்யும்.இனிமேல் வெப்பநிலை குறைந்து மேகமூட்டத்துடன் காணப்படும்.
 ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்திரபிரதேசம், ஹரியானா மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மலைப் பகுதிகளில் அடுத்த 2- 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கிழக்கு இந்தியாவில் புயல்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.நாட்டில் வெப்ப அலைகள் முடிந்துவிட்டதால், வெப்பநிலை குறைந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags : rain

Share via