அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தம்

by Editor / 09-09-2022 11:59:54am
அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தம்

திருவாரூர் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தம் பேச்சுவார்த்தைக்கு பிறகு கைவிடப்பட்டது. 

திருவாரூரில் இருந்து நாகூர் செல்லும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பெருங்கடம்பனூர் என்கிற இடத்தில் நான்கு இளைஞர்களால் தாக்கப்பட்ட விவகாரத்தில் விவின் என்கிற இளைஞர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள மூன்று நபர்களையும் கைது செய்ய வேண்டும்.அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 150 க்கும் மேற்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். 

இதன் காரணமாக பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் அவதியுற்றனர். இதனையடுத்து நிலை நாகை அரசு போக்குவரத்து கழக மண்டல துணை மேலாளர் வணிகம் சிதம்பரகுமார் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை  நடத்தி இன்று மாலைக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தற்போது போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via