திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞர் தீக்குளித்து தற்கொலை

by Editor / 09-09-2022 01:37:27pm
திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞர் தீக்குளித்து தற்கொலை

சேலத்தில் திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.வெங்கடேசபுரத்தை  சேர்ந்த மோகன சுந்தரம் என்பவர் கடந்த சில வருடங்களாக கோவையில் உள்ள கண்ணாடி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கோவையிலிருந்து சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற அவர் திடீரென தன் உடல்மீது தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். முதற்கட்ட விசாரணையில் மோகனசுந்தரம் தமக்கு திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கத்தில் இருந்ததாகவும் இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via