மதுபோதையில் பாடம் எடுத்த பெண் ஆசிரியர்
கர்நாடக மாநிலம் துமாபூர் பகுதியில் அரசு ஆரம்ப பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் கங்கா லெட்சுமால் என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அவர் மதுவுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகின்றது. மேலும், இவர் பள்ளிக்கு மது பாட்டிலை கொண்டு வந்து மது அருந்தியபடி மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார். இதனை சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனை கண்டுகொள்ளாமல் ஆசிரியை கங்கா லெட்சுமால் தொடர்ந்து மது அருந்தி விட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, பள்ளிக்கு வருகை தந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும், கங்கா லக்ஷ்மம்மாவின் வகுப்பறைக்கு சென்ற அவர்கள், வகுப்பறையில் சோதனை செய்தனர். அப்போது, மேசை டிராயரில் மதுபாட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. அவரும் குடிபோதையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்த கல்வித்துறை அதிகாரிகள், பின்னர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
Tags :