குடிபோதையில் கிணற்றில் குதித்த இளைஞர் பலி

by Editor / 10-09-2022 01:58:42pm
குடிபோதையில் கிணற்றில் குதித்த இளைஞர் பலி

குடிபோதையில் கிணற்றில் குதித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரை காப்பாற்ற குதித்த இளைஞர்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

கேரளாவின் கொட்டாரக்கரை அருகே காடம்குளம் சருவிளையில் வினீத் (25) என்பவர் உயிரிழந்துள்ளார். நவோதயா பள்ளி அருகே உள்ள திருக்கண்ணமங்கல் இடிசியில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், வினீத் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் போது அருகில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். அவருடன் இருந்த நண்பர்கள் ஷியாம், பிரதீப் ஆகியோர் அவரை காப்பாற்ற பின்னால் குதித்தனர்.

கிணற்றில் விழுந்த 3 பேரையும் தீயணைப்பு படையினர் மீட்டனர். அதற்குள் வினீத் இறந்து விட்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளைஞரின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via