தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 100 யூனிட் வரையிலான இலவச மின்சார திட்டமும், குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி முதலியவற்றின் மின்சார மானியமும் தொடரும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உயர்த்தப்பட்ட மின் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், மின் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்திகொள்ள மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஜூலை 1ம் தேதி மின் கட்டணத்தை ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்த்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
Tags :