ஈக்வடாா் சிறையில் கலவரம்: 24 போ பலி

by Editor / 30-09-2021 06:05:30pm
ஈக்வடாா் சிறையில் கலவரம்: 24 போ பலி

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் 24 கைதிகள் உயிரிழந்தனா்.
குவாயாகுவில் நகரிலுள்ள மண்டல சிறைச்சாலையில் கைதிகளிடையே செவ்வாய்க்கிழமை கலவரம் வெடித்தது.


இதில், இரு குழுக்களைச் சோந்த கைதிகள் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் பரஸ்பரம் தாக்கிக் கொண்டனா். இந்தக் கலவரத்தில் வெடிகுண்டுகளும் பயன்படுத்தப்பட்டன.இதில் 24 போ உயிரிழந்தனா்; 48 போ காயமடைந்தனா்.கலவரம் தொடங்கிய 5 மணி நேரத்தில் போலீஸாரும் ராணுவம் சிறைச்சாலையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா் என்று அதிகாரிகள் கூறினா்.


ஈக்வடாரின் 3 சிறைகளில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரே நேரத்தில் நடைபெற்ற கலவரத்தில் 79 கைதிகள் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

 

Tags :

Share via