காற்றாலைகளில் காப்பர் வயர் திருடும் கும்பல் சிக்கியது.

by Editor / 13-12-2022 10:53:48pm
காற்றாலைகளில் காப்பர் வயர் திருடும் கும்பல் சிக்கியது.

தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், பாவூர்சத்திரம், சுரண்டை, ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான காற்றாலைகள் இயங்கி வருகின்றன. இதில் பல பகுதிகளிலுள்ள காற்றாலைகள் அந்தந்த நிறுவனங்களால் இயக்கப்படாமல் உள்ளது.இந்த நிலையில் இயக்கபடாமலிருக்கும் காற்றாலைகளில் உள்ள விலையுயர்ந்த  மின் வயர்கள் தொடர்ந்து திருடு போகும் சம்பவம் அரங்கேறி வந்தது. இதற்காக காவல்துறையில் தனிப்படை அமைக்கப்பட்டு காற்றாலை வயர் திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கும் பணி  தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில்  பாவூர்சத்திரம் கேடிசி நகர் அருகே வைத்து தனிப்பிரிவு போலீசார் கூண்டு கட்டிய நிலையில் வந்த மினி டெம்போ லாரியை மடக்கி ஆய்வு செய்தனர் அப்பொழுது அதில் சென்னையைச் சேர்ந்த கமலக்கண்ணன்,  கந்தவேல்,சரத்குமார், கரன், மணிகண்டன், ஆகிய 5நபர்களை கடந்த 12ஆம் தேதி கைது செய்த நிலையில் இன்று ஆலங்குளம் அருகே தனியார் காற்றாலையில் 10.50 லட்சம் மதிப்பில் உள்ள காப்பர் ஒயரை திருடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும்  திருட்டிற்கு பயன்படுத்திய கார் மற்றும் மினி லாரி பறிமுதல் செய்து ஆலங்குளம் போலீசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via