கார் சிலிண்டர் வெடிவிபத்து : 5 பேர் மீது உபா சட்டம் பாய்ந்தது

by Staff / 25-10-2022 05:47:05pm
கார்  சிலிண்டர் வெடிவிபத்து : 5 பேர் மீது உபா சட்டம் பாய்ந்தது

கோவை மாநகரத்தின் முக்கிய பகுதியான கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று முன்தினம் அதிகாலை கார் வெடித்து அதில் இருந்தவர் பலியானார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இதனிடையே காரில் இருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் கைதான 5 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுச்சதி, 120பி, 153ஏ மற்றும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via