ஐபிஎல் அட்டவனை அறிவிப்பு: முதல் போட்டியில்   சிஎஸ்கே- எம்.ஐ மோதல்

by Editor / 25-07-2021 07:54:56pm
 ஐபிஎல் அட்டவனை அறிவிப்பு: முதல் போட்டியில்   சிஎஸ்கே- எம்.ஐ மோதல்

 


சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் போட்டியுடன் ஐபிஎல் தொடரின் ஆட்டம் துபாயில் மீண்டும் தொடங்கவுள்ளது.


இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கொரோனா 2ஆவது அலை காரணமாக நிறுத்தப்பட்டது. பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.


செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடித்துவிடலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போட்டி குறித்த அட்டவணை வெளியாகியுள்ளது.  இந்த தொடரில் ஏற்கனவே நடந்த முதல் போட்டியில் சென்னை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியிருந்தது. எனவே அதிக ரசிகர் பட்டாளங்களை கொண்ட இந்த அணிகளின் மோதலுடன் ஐபிஎல்-ன் 2வது பாதி தொடங்கவிருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ப்ளே ஆஃப் போட்டிகள் அக்டோபர் 10, 11 மற்றும்ம் 13ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 15ம் தேதி இறுதிப்போட்டி துபாயில் நடைபெறவுள்ளது.டம்பர் 19ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன

 

Tags :

Share via