உள்ளாடையில் தங்கத்தை கடத்தி வந்த வாலிபர் கைது
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் உதய் பாஸ்கர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் கண்காணித்துள்ளனர்.
அப்போது சென்னையை சேர்ந்த யாசர் அரபாத் என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் இருந்த உள்ளாடைகளை பிரித்து சோதனை செய்தனர்.
அப்போது உள்ளாடைக்குள் ரகசிய அறை வைத்து தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டு பிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 44 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 990 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இது தொடர்பாக யாசர் அரபாத்தை கைது செய்து, கடத்தல் பிண்ணனி குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Tags :