பக்கத்து வீட்டு ஆன்ட்டியை பாடாய் படுத்திய வாலிபர்

by Editor / 10-09-2022 03:37:11pm
பக்கத்து வீட்டு ஆன்ட்டியை பாடாய் படுத்திய வாலிபர்


சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் சுயதொழில் செய்து கணவன் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார், இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் கடந்த மாதம் 22ஆம் தேதி அந்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்புகொண்டு பேசியதுடன், அன்று முதல் ஆபாச குறுஞ்செய்தி, ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பி வந்துள்ளார். தன்னுடன் உடலுறவுக்கு வருமாறு அழைத்து தொல்லை கொடுத்து வந்ததுடன், அந்தப் பெண்ணின் கைபேசி எண்ணை தனது முகநூல் பக்கத்தில் பாலியல் தேவைக்கு தொடர்பு கொள்ளவும் எனக்கூறி பகிர்ந்துள்ளார்.

இதனால் அந்தப் பெண்ணுக்கு பல விரும்பத்தகாத அழைப்புகள் வந்துள்ளது. அதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் பாதிக்கப்பட்ட பெண் வாழும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது, இதையடுத்து போலீசார் ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.அந்தப் பெண்ணின் மீது ஏற்பட்ட சபலத்தின் காரணமாக அந்த இளைஞர் இப்படி டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via