மாணவிகளுக்கு பந்து வீசி விளையாடிய ராகுல்காந்தி

by Editor / 11-09-2022 03:35:30pm
மாணவிகளுக்கு பந்து வீசி விளையாடிய ராகுல்காந்தி

ராகுல் காந்தி காட்டாத்துறை என்ற இடத்தில் சென்றபோது தி பாக்கிய நாத் பப்ளிக் பள்ளி என்ற பள்ளிக்கூடத்தில் மாணவிகள் கூடை பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் வியர்க்க விறுவிறுக்க பள்ளி வாசலுக்கு வந்து ராகுலை பார்த்து கொண்டிருந்தார்கள். உடனே யாத்திரை அணி வகுப்பில் இருந்து விலகி தட தடவென்று பள்ளி வளாகத்துக்குள் சென்றுவிட்டார்.

அவரை பார்த்ததும் மாணவிகளுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அனைவரிடமும் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கினார். அதில் ஒரு குறும்புக்கார மாணவி டெல்பா என்பவர் 'அங்கிள், பிளீஸ் கம் ஆன்ட் ஜாயின் மீ என்று ஆங்கிலத்தில் பேசி ஆர்வமாக அழைத்ததும்' நான் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமல்லவா? ஒவ்வொரு நிமிடமும் எனக்கு முக்கியம். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்றார்.

மாணவிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பந்தை எடுத்து வீசினார். அதை தொடர்ந்து எங்களோடு ஒரு செல்பியாவது எடுங்கள் என்றதும் அவரும் போஸ் கொடுத்தார். அனைவரும் உற்சாகமாக போஸ் கொடுத்தனர்.

 

Tags :

Share via