போதைப்பொருள் வைத்திருந்ததால் இஸ்ரேல் நாட்டு பெண்மணிக்கு மரணதண்டனை

by Staff / 06-04-2022 04:27:50pm
போதைப்பொருள் வைத்திருந்ததால் இஸ்ரேல் நாட்டு பெண்மணிக்கு மரணதண்டனை

அரபு அமீரகத்தில் கொக்கின் போதைப் பொருள் வைத்திருந்த இஸ்ரேல் நாட்டு பெண்மணிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் புகைப்பட ஸ்டூடியோ நடத்திவந்தா ஃபிடா கடந்த ஆண்டு வேலை நிமித்தமாக துபாய் சென்றுள்ளார்.

ஒரு வாரத்திற்கு பின் தங்கியிருந்த வீட்டை போலீசார் சோதனையிட்ட போது 500 கிராம் கொக்கைன் போதை பொருள் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டவர்.

அவருக்கு  நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது அதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய உள்ளார்.

துபாயில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை வெளிநாட்டினர் புரிந்து கொள்ள வேண்டுமென அதிகாரிகள்  அறிவுறுத்தி வருகின்றனர்

 

Tags :

Share via