சம்பளம் தராததால் முதலாளியின் பென்ஸ் காரை தீ வைத்து கொளுத்திய இளைஞர்

by Staff / 15-09-2022 04:42:51pm
சம்பளம் தராததால் முதலாளியின் பென்ஸ் காரை தீ வைத்து கொளுத்திய இளைஞர்

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கவுதம் புத்த நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. காரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அந்த இளைஞன் ஓடும் காட்சியும் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவத்தின் முழு காட்சியும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மெர்சிடிஸ் உரிமையாளரின் வீட்டிற்கு டைல்ஸ் வேலை செய்வதற்காக அந்த இளைஞர் வந்துள்ளார். வேலை முடிந்தாலும், முதலாளி அவருக்கு முழுத் தொகையையும் கொடுக்கவில்லை. சம்பளம் குறித்து முதலாளியிடம் பலமுறை பேசியும் பலனில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞன் பென்ஸ் காருக்கு தீ வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வீடியோவில் பைக்கில் வந்த வாலிபர் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிப்பது தெளிவாக தெரிகிறது. காரில் தீப்பற்றியதையடுத்து, அந்த நபர் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றார்.

சம்பவம் நடந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் குற்றவாளி அடையாளம் காணப்பட்டார். அவரது கைது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். சந்தேக நபரின் பெயர் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் விவாதம் நடந்து வருகிறது.
 

 

Tags :

Share via