அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடிவளர்த்த காதல்ஜோடி 

by Editor / 16-09-2022 08:33:29pm
அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடிவளர்த்த காதல்ஜோடி 

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது ஒரு குடியிருப்பில் கஞ்சா செடி வளர்க்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அந்த குடியிருப்பின் சமையலறையில் ஒரு மண் சட்டியில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டது தெரியவந்தது. 4 மாதமான அந்த செடி ஒன்றரை மீட்டர் உயரம் இருந்தது.

கஞ்சா செடியை கைப்பற்றிய போலீசார், அந்த குடியிருப்பில் வசித்து வந்த பத்தனம்திட்டா மாவட்டம் கோனி பகுதியை சேர்ந்த ஆலன் (26) அவரது  காதலியான காயங்குளத்தை சேர்ந்த அபர்ணா (24) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கஞ்சா செடியை வளர்ப்பது எப்படி? என்பதை இன்டர்நெட்டில் பார்த்து 2 பேரும் வீட்டில் கஞ்சாக செடியை வளர்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via