நாடக திருமணங்கள் செய்து 15க்கும் அதிகமான ஆண்களை ஏமாற்றியதிருநங்கை பபிதா ரோஸ் மீது புகார்.

by Editor / 17-09-2022 11:14:56pm
நாடக திருமணங்கள் செய்து 15க்கும் அதிகமான ஆண்களை ஏமாற்றியதிருநங்கை பபிதா ரோஸ் மீது புகார்.


திருநங்கை பபிதா ரோஸ் என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி பல ஆண்களுடன் தொடர்பில் இருந்து,நாடக திருமணங்கள் செய்து இதுவரை 15க்கும் அதிகமான ஆண்களை ஏமாற்றியும்,இதில் வெவ்வேறு மாவட்டங்களில் நாடகமாடி 8 நபர்களை திருமணம் செய்தும் ஏமாற்றி உள்ளார். இதில் லட்சக்கணக்கில் பணம், கிலோ கணக்கில் நகை என மிக பெரிய மோசடியில் இவர் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று திரண்டு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர். 

ஈரோடு,திருச்சி,கடலூர், கள்ளக்குறிச்சி,கோவை, மடத்துக்குளம் திருப்பூர்,விருதுநகர், ராஜாப்பாளையம், நாகர்கோவில் போன்ற பல ஊர்களில் இருந்து பாதிக்கப்பட்ட ஆண்கள்,காவல் துறையில் பணியாற்றி வரும் நபர்கள்,நகை கடை உரிமையாளர்கள் என சுமார் 15க்கும் அதிகமான நபர்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரிடம் பபிதா ரோஸை கைது செய்து உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவை அளித்துள்ளனர்.

 

Tags :

Share via