தென்மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்

by Editor / 18-09-2022 10:25:54am
தென்மேற்கு வங்கக்கடலில்  பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்

தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சில   தென்மேற்கு பருவமழையால் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கும் தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்படும். மத்திய மேற்கு வங்கக்கடல், மன்னர் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் அப்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்" என எச்சரித்துள்ளது.

 

Tags :

Share via