தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை

by Staff / 21-09-2022 11:02:05am
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஏற்கனவே 95 மீன்பிடி படகுகளும், 11 மீனவர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இன்று மேலும் 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்-அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், அவர்களது விசைப்படகுகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via