பேப்பர் பிளேட் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 3 பேர் பலி

by Staff / 21-09-2022 12:22:04pm
பேப்பர் பிளேட் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 3 பேர் பலி

ஆந்திர மாநிலம் சித்தூரில் பேப்பர் பிளேட் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்கள் இன்னும் சரியாக தெரியவில்லை. கடுமையான தீக்காயங்களுடன் தொழிலாளர்கள் சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொழிற்சாலை முழுவதும் வேகமாக தீ பரவி, ஏறிந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via