சாம்பவர்வடகரையில் அதிகாலையில் பயங்கரம் கல்லால் அடித்து தந்தை கொலை பரபரப்பு மகன் கைது

by Editor / 23-11-2023 09:27:42pm
சாம்பவர்வடகரையில் அதிகாலையில் பயங்கரம் கல்லால் அடித்து தந்தை கொலை பரபரப்பு மகன் கைது


    தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரை சாலை விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் கருப்பசாமி தேவர் (74) இவருக்கு 
செண்டு என்ற மனைவியும் 2 ஆண் மற்றும் 1 பெண் குழந்தைகள் உள்ளனர் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.
    இவரது மகன் சக்திவேல் (45) என்பவர் அதே பகுதியில் ஈஸ்வரி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார் இவருக்கு திருமணமாகி ஜெயந்தி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
    சக்திவேல் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவருகிறது இதற்கு திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார்  இந்நிலையில் சக்திவேல் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் அவரது மனைவி இவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் என கூறப்படுகிறது.
     இதில் கருப்பசாமி தேவர் அப்பகுதியில் உள்ள கருப்பசாமி கோவில் அருகே ஒரு குடிசை அமைத்து மனைவியுடன் வசித்து வருகிறார்.
    இந்நிலையில் சக்திவேல் கடந்த சில நாட்களாக மாத்திரை வாங்கி சாப்பிடவில்லையாம் இதனை அறிந்த கருப்பசாமி தேவர் மகனை அழைத்து மாத்திரை வாங்கி சாப்பிட சொல்லி சத்தம் போட்டுள்ளார். 
   இதனால் ஆவேசமடைந்த சக்திவேல் அவரது தந்தையை அருகில் கிடந்த கல்லால் முகம் மற்றும் உடம்பில் பலமாக தாக்கியுள்ளார் இதில் கருப்பசாமி தேவர் சம்பவம் இடத்திலேயே பலியானார். 
இது குறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த சாம்பவர்வடகரை போலீஸ் எஸ்ஐ ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கருப்பசாமி தேவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விசாரணை நடத்தி சக்திவேலை கைது செய்தனர்
   இச் சம்பவம் இப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

Tags : சாம்பவர்வடகரையில் அதிகாலையில் பயங்கரம் கல்லால் அடித்து தந்தை கொலை பரபரப்பு மகன் கைது

Share via