அம்பத்தூர் வட்டாட்சியர்கள் 16 பேருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை

by Staff / 07-03-2024 12:42:01pm
அம்பத்தூர் வட்டாட்சியர்கள் 16 பேருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை

சென்னை அம்பத்தூரில் உள்ள தனதுசொத்துக்கு பட்டா கோரி மோலி அலெக்ஸாண்டர் என்பவர் வருவாய்த் துறை அதிகாரிகளிடம்மனு தாக்கல் செய்தார். அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த வருவாய் கோட்டாட்சியர் மனுதாரருக்கு பட்டா வழங்க அம்பத்தூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். ஆனால் வட்டாட்சியர் பட்டா வழங்க மறுத்ததால் மோலி அலெக்சாண்டர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், பட்டா வழங்க கடந்த 2010-ம்ஆண்டு அம்பத்தூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டது. ஆனால் அதன்பிறகும் பட்டா வழங்காததால் மோலி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2011-ல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

அம்பத்தூரில் வட்டாட்சியர்களாக பணிபுரிந்த16 அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்துஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்களை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட வாரண்டை எதிர்த்து அரசு தரப்பில் உடனடியாக முறையீடு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via