24 மணி நேரத்தில் மழையினால் 22 பேர் பலி

by Editor / 22-07-2023 02:17:02pm
24 மணி நேரத்தில் மழையினால் 22 பேர் பலி

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மழையினால் 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேச மாவட்டத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழந்த நிலையில், நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் இன்று பூனே, பால்கர், ராய்கட் மற்றும் தானே ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via