தமிழகம் முழுவதும் 5,583 பள்ளி கட்டிடங்கள் சேதம்

by Staff / 22-09-2022 03:28:26pm
தமிழகம் முழுவதும் 5,583 பள்ளி கட்டிடங்கள் சேதம்

மதுரையை சேர்ந்த சமூகநல ஆர்வலர் செந்தில் முருகன் தமிழகத்தில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்ட குழு அமைக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் "தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 2021-2022 ஆண்டு தமிழகத்தில் 2553 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளது. 2022-2023 ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு 3030 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் அகற்றப்பட உள்ளது" என தெரிவிக்கப்பட்டது.இதனை பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்.
 

 

Tags :

Share via