வீட்டில் கள்ளகாதலனுடன் தனிமையில் இருந்த மனைவி....கணவன் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 17-10-2022 02:12:44pm
வீட்டில் கள்ளகாதலனுடன் தனிமையில் இருந்த மனைவி....கணவன் தூக்கிட்டு தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அருகேயுள்ள மலையடிபுதூர் பருத்திவிளை தெருவை சேர்ந்தவர் ஐயப்பன்(35). கூலித்தொழிலாளியான இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை தொடர்பாக ஐயப்பன் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. ஐயப்பன் மனைவி ஈஸ்வரிக்கும் அதே ஊரை சேர்ந்த சீனித்துரைக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 12-ம் தேதி ஐயப்பன் வீட்டிற்கு வந்த போது, மனைவி ஈஸ்வரியும், சீனித்துரையும் தனிமையில் இருந்துள்ளனர். இதனால் மனமுடைந்தவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனை தொடர்ந்து வீட்டில் தனியாக இருந்த ஐயப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஐயப்பனின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மனைவி ஈஸ்வரியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள சீனித்துரையை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via