மதுரையில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக மேலும் ஒருவர் கைது

by Editor / 26-09-2022 12:21:41pm
மதுரையில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக மேலும் ஒருவர் கைது

மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் பிரமுகர் கிருஷ்ணன் என்பவர் வீட்டில் சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இது சம்பந்தமாக சிசிடிவி காட்சிகள் வெளியானதை கொண்டு மதுரை கீரைத்துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் நேற்று இருவரை கைது செய்தனர்.  இந்த நிலையில் நேற்று இரவு மதுரை எஸ் எஸ் காலனி பகுதியைச் சேர்ந்த அபுதாகிர் என்பவரை நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் வீட்டிலிருந்த இருந்தபோது சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.

அதைத்தொடர்ந்து காவல் நிலையம் சென்ற அபுதாஹீரின் வழக்கறிஞர் விசாரணை செய்து கொள்ளுங்கள், ஆனால் அவரை தாக்க கூடாது என்று தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று அபுதாஹிரை தாக்கியது தொடர்பாக மதுரை கோரிப்பாளையம், வில்லாபுரம், சுப்பிரமணியபுரம், நெல்பேட்டை ஆகிய ஜமாத்துகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கீரை துறை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்  
பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக சிசிடிவி வெளியான நிலையில், காவல் நிலையத்தில் மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் காவலர்கள் தாக்குவதாக கைதி அலறும் வீடியோ வெளியானது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via