தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு

by Staff / 05-06-2023 01:28:32pm
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் புதிய அறிவிப்பின் படி, 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 14ஆம் தேதியும், 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பம் இன்னும் தணியாத நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சருடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகள் ஆலோசனை நடத்திய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

 

Tags :

Share via