சுரங்க இரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு

by Staff / 13-04-2022 02:20:28pm
சுரங்க இரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்கா நியூயார்க்கில் சுரங்க ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயமடைந்தனர் கிளியின் நகர் ரயில் நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலையில் பொதுமக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. ரயில் நிலையம் பகுதியில் கண்ணீர்புகை குண்டு போன்ற பொருளை வீசிய முகமூடி அணிந்த நபர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. திடீர் தாக்குதலில் 16 பேர் நிலைகுலைந்து கீழே விழுந்தனர் சம்பவ இடத்தில் போக்குவரத்தை முடக்கிய போலீசார் கொடூர செயலில் ஈடுபட்டு விட்டு தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via