தமிழகத்தில் 4 நாட்களுக்கு அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழை எச்சரிக்கை.!

by Editor / 27-08-2022 10:35:13am
தமிழகத்தில் 4 நாட்களுக்கு அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய  கனமழை எச்சரிக்கை.!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்து 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு,கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌ மற்றும்‌ திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

28.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி,ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, திருச்சிராப்பள்ளி,கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்‌, கடலூர்‌, திருப்பத்தூர்‌, விழுப்புரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

29.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி,கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, விருதுநகர்‌, சிவகங்கை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம்‌, நாமக்கல்‌ மற்றும்‌ திருப்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

30.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி,ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, வேலூர்‌, திருப்பத்தூர்‌ மற்றும்‌ ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் 4 நாட்களுக்கு அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய  கனமழை எச்சரிக்கை.!
 

Tags :

Share via