வானதி சீனிவாசன் முதல்வருக்கு வேண்டுகோள்

by Staff / 26-09-2022 03:39:24pm
வானதி சீனிவாசன் முதல்வருக்கு வேண்டுகோள்

கோவையில் பா.ஜ.க அலுவலகம் உள்பட 7 இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்தது. இந்த நிலையில் கோவை பா.ஜ.க அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை பா.ஜ.க.வின் தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கோவை மாநகர பகுதிகளில் 6 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளது. பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் வீடு, கடைகள் ‌மீது தாக்குதல் நடந்துள்ளது. இதுவரை 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் பல்வேறு காலகட்டங்களில் பயங்காரவாத தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. இங்கு நடைபெறும் சிறு, சிறு பிரச்சினையும் பெரிய விளைவை ஏற்படுத்தும். இதுபோன்ற செயல்களில் யார் செயல்பாட்டாலும் தயவுதட்சனம் பார்க்காமல், சமரசம் செய்து கொள்ளாமல் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதியை குலைத்து விட்டு வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது என வலியுறுத்தினார்.
 

 

Tags :

Share via