காஞ்சிபுரத்தையே கலங்க வைத்த பெண் தாதா

by Staff / 26-09-2022 04:51:02pm
காஞ்சிபுரத்தையே கலங்க வைத்த பெண் தாதா

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (30). சமூக அக்கறை கொண்ட இளைஞராக இருக்கும் இவர் திமுக வார்டு செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில், தனது பகுதியில் லோகேஸ்வரி விற்கும் கள்ளச்சாரயத்தால் பல இளைஞர்கள் மதுவுக்கு அடிமையானது தெரியவந்தது. இதனால், லோகேஸ்வரியை தனியாக சந்தித்து சதீஷ் கண்டித்துள்ளார். மேலும், இளைஞர்களுக்கு மது விற்பதை தடுக்க லோகேஸ்வரி மீது போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தற்காலிகமாக கள்ளச்சாராயம் விற்பனையை நிறுத்திவைக்குமாறு போலீசார் லோகேஸ்வரியிடம் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், லோகேஸ்வரிக்கு கிடைக்க கூடிய வருமானம் தடைபட்டது. இந்நிலையில், சதீஷை தனது வீட்டிற்கு வரவழைத்த லோகேஸ்வரி பெரிய அரிவாளால் சதீஷின் தலையை துண்டித்து, உடலை தெருவோரம் வீசிவிட்டு தலைமறைவானார். பின்னர் 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் லோகேஸ்வரியை கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின

45 வயதாகும் லோகேஸ்வரி, பாலியல் தொழிலில் ஈடுபட்டு பணம் ஈட்டி வந்தார். விபச்சார தொழிலில் பல இளம்பெண்களின் வாழ்க்கையை நாசப்படுத்தியுள்ளார். பின்பு கள்ளச்சாராயம் தொழில்தான் பிரதானமாக மாறியது. தற்போது காஞ்சிபுரம் தாதா என்றால் லோகேஸ்வரிதான். சொந்த கணவனையே கொலை செய்தவர், பொதுமக்களே அஞ்சி நடுங்குவார்கள். தனது தொழிலுக்கு யாராவது இடஞ்சல் தந்தால், அவர்களது வீக் பாய்ண்ட் அறிந்து பெண்களின் வலையில் சிக்க வைத்து காரியம் சாதிப்பார் என்பது வரை தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via