தமிழகத்தில் அடுத்த சட்ட சபைத் தேர்தலில், ஒரு மாற்றுக் கட்சியாக பாஜக வரும்

by Staff / 26-09-2022 05:43:55pm
தமிழகத்தில் அடுத்த சட்ட சபைத் தேர்தலில், ஒரு மாற்றுக் கட்சியாக பாஜக வரும்

தமிழகத்தில் அடுத்த சட்ட சபைத் தேர்தலில், ஒரு மாற்றுக் கட்சியாக பாஜக வரும்: சுப்பிரமணிய சுவாமி
மதுரை: மதுரையில் பாஜக-வைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி 83-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பிரமுகர்கள், தொழிலதிபர்கள். சுப்பிரமணிய சுவாமியை வாழ்த்தினர்.இதனைத் தொடந்து, விழாவில் சுப்பிரமணியன் சுவாமி பேசியபோது, சுதந்திரம் பெற்ற பிறகு, மெதுவாக இந்தியா சொந்த காலில் நிற்க தொடங்கியுள்ளது.

தமிழர்கள் அறிவு உள்ளவர்கள். ஆனால், தைரியம் இல்லாதவர்கள். எனவே, புதிய தமிழர்களை உருவாக்க வேண்டும். என்னை ஏன் இவ்வளவு தைரியமாக இருக்கிறீர்கள் என வட மாநிலத்தில் உள்ள தலைவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். புதிய தமிழனை உருவாக்க வேண்டும். ஆங்கிலேயர்கள் ஆரியன், திராவிடன் என்ற பிரிவினையை உண்டாக்கினார்கள். ஆரியன், திராவிடன் என்ற வார்த்தை இல்லை. தமிழகத்தில் அடுத்த சட்ட சபைத் தேர்தலில், ஒரு மாற்றுக் கட்சியாக பாஜக வரும் என்றார்.

 

Tags :

Share via