கார்கள் திருடிய ஐந்து பேர் கைது

by Staff / 03-10-2022 03:04:45pm
 கார்கள் திருடிய ஐந்து பேர் கைது

தஞ்சையில் கார்கள் திருடி 5 பேர் கைது தஞ்சை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் அன்பழகன் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் தன்னுடைய நிறுவனத்தில் உள்ள கார்களை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு எதிரில் உள்ள அலுவலகம் அருகே நிறுத்தி வைத்திருந்தார் அலுவலகத்திற்கு எதிரே நிறுத்தி வைத்திருந்த இரண்டு கார்களை காணவில்லை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கார்கள் கிடைக்கவில்லை இதனால் கார்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டதாக தஞ்சை மருத்துவ கல்லூரி போலிஸ் நிலையத்தில் அன்பழகன் புகார் செய்தார் அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் இந்த நிலையில் மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள மூலிகை பண்ணை அருகே போலீஸ் டாக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் வந்த காரை மதித்தனர் போலீசார் காரை மறிப்பதை பார்த்ததும் காரில் இருந்தவர்கள் காரை அங்கே நிறுத்திவிட்டு தப்பி ஓட முயற்சித்தனர் உடனே அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர் விசாரணையில் அவர்கள் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பூக்காரி தெருவை சேர்ந்த சேவியர் மகன் ரெனால்ட் தஞ்சையை அடுத்த பகவதி மகன் தவபாண்டியன் தென் வெட்டுக்கார தெருவை சேர்ந்த மதியழகன் மகன் ஹரிஹரன் ஆகியோர் என்பதும் அவர்கள் ஓட்டி வந்தது திருடப்பட்ட கார் என்பதும் தெரியவந்தது அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வண்ணாரப்பேட்டை பகுதிக்கு சென்று அங்கிருந்து தஞ்சை புதுக்கோட்டை சாலை ஆர் ஆர் நகரை சேர்ந்த சதீஷ்குமார் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள குறிஞ்சிநகரை சேர்ந்த சுரேஷ் குமார் ஆகியோரிடம் இருந்து காரை பறிமுதல் செய்தனர் இதையடுத்து அவர்கள் ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

 

Tags :

Share via