சீட்டு நடத்தி பணம் மோசடி செய்த பெண் கைது

by Staff / 03-10-2022 03:58:02pm
சீட்டு நடத்தி பணம் மோசடி செய்த பெண் கைது

மதுரை பரவை சங்கன்கோட்டை சேர்ந்த  கஸ்துாரி 47, இவரிடம் ரூ. 12 ஆயிரம் கட்டினால் 16 ஆயிரம் தருவதாக கூறி தீபாவளி பண்டு சீட்டு நடத்தி வந்தார்.அம்மன் கோயில் தெருவை  சேர்ந்த  அன்னபூர்ணம் 59, மூலம் 15 நபர்கள் கட்டிய ரூ. 3 லட்சத்து 57 ஆயிரத்து 600'ஐ சீட்டு தேதி முடிந்தும் தரமால் மிரட்டல் விடுத்து வந்தவர், தலைமறைவானார். அன்னபூர்ணம் புகாரில் கஸ்துாரியை சமயநல்லுார் போலீசார் கைது செய்தனர். தொடர் விசாரணையில் மேலும் 33 பேரிடம் ரூ. 15 லட்சத்திற்கு மேல் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.
 

 

Tags :

Share via