சிட்டிக்கு நடுவில் பயங்கரம்... 3 பேருக்கு கத்திக்குத்து
மத்திய லண்டன் பகுதியில் லிவர்பூல் ஸ்ட்ரீட் ஸ்டேசன் பகுதியருகே இன்று திடீரென 3 பேர் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அப்பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். தாக்கப்பட்டவர்கள் அருகேயுள்ள மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டனர். எனினும் இது பயங்கரவாத தாக்குதல் அல்ல என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கான காரணம் பற்றி உடனடியாக தகவல்கள் எதுவும் தெரிய வரவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :