கொலைமிரட்டல் 4 பேர் மீது வழக்கு

by Staff / 07-10-2022 05:57:42pm
கொலைமிரட்டல் 4 பேர் மீது வழக்கு

கடலூர் மாவட்டம் சாத்தமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கெங்காசலம், 47; அப்பகுதியில் உள்ள கோட்டையம்மன் கோவிலுக்கு செல்ல கெங்காசலத்தின் காலிமனையை பொதுமக்கள் வழியாக பயன்படுத்தி வந்தனர். நேற்று கெங்காசலம் தமது காலி மனைக்கு வேலி கட்டினார். அப்பகுதியை சேர்ந்த பெருமாள், 52; அவரது மனைவி தமிழ்செல்வி, 47; ஆறுமுகம், 60; ஜெயராமன், 52, ஆகியோர் கெங்காசலத்திடம் ஏன் வழியை மறைத்து வேலி கட்டுகிறாய் என கேட்டு, தகராறு செய்து, அவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். கெங்காசலம் கொடுத்த புகாரின் பேரில், பெருமாள் உட்பட நால்வர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via