ஒரு லட்சம் ரூபாய் வெகுமதி பெற்ற திருவண்ணாமலை மாவட்ட தனிப்படை போலீசார்

by Editor / 06-05-2023 10:03:25pm
ஒரு லட்சம் ரூபாய் வெகுமதி பெற்ற திருவண்ணாமலை மாவட்ட தனிப்படை போலீசார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான ஆசிப் ஜாவித் என்பவனை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் நியமிக்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்ட தனிப்படையினர் கடந்த ஒரு மாத காலமாக புதுடெல்லி ஹரியானா ராஜஸ்தான் ஹிமாச்சல் பிரதேஷ் அசாம் ஆகிய மாநிலங்களில் தேடி வந்த நிலையில் இறுதியாக ஹரியானா ராஜஸ்தான் மாநில எல்லையில் உள்ள ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில் இருந்த பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட தனிப்படையினர் அதிரடியாக துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்து அவரிடமிருந்து  ரூபாய் 15 லட்சம் ரொக்க பணம் மற்றும் மாருதி ஸ்விப்ட் கார் பறிமுதல் செய்யப்பட்டு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டு காவல் வாகனம் மூலம் திருவண்ணாமலை அழைத்து வரப்பட்டது.    இந்த வீரதீர செயலை அறிந்த தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட தனிப்படையினருக்கு ஒரு லட்ச ரூபாய் வெகுமதி அளித்து பாராட்டினார்.

 

Tags :

Share via