இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த காங்கிரஸ் கட்சியினர்

by Staff / 08-10-2022 01:47:43pm
இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த காங்கிரஸ் கட்சியினர்

கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியம் திமுகவைச் சேர்ந்த காக்கா சாவடி ஊராட்சி மன்ற தலைவர் பிரதீபா பூபதி, கரூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பாமகவை சேர்ந்த சத்யா அசோக்குமார் மற்றும் கரூர் மாவட்ட கவுன்சிலர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவானந்தம் ஆகியோர் அக்கட்சிகளில் இருந்து விலகி, இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான எம். ஆர். விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவரும் மாவட்ட பொருளாளருமான கண்ணதாசன் ஆகியோர் உடன் இருந்தார்.

 

Tags :

Share via