ஆட்டோ மீது கார் மோதி சிறுவன் பலி

by Staff / 08-10-2022 02:28:30pm
ஆட்டோ மீது கார் மோதி சிறுவன் பலி

தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுக்கா மனக்கரம்பை பகுதியை சேர்ந்தவர் சின்னையன் இவருடைய மனைவி சித்ராதேவி தஞ்சை மேலவஸ்தா சாவடியில் நெல் சேமிப்பு கிடங்கு அருகே நிறுத்தப்பட்டு இருந்த லாரியை பார்ப்பதற்காக மனைவி மற்றும் பேரன் சூர்ய தேவ பாண்டியனுடன் சின்னையன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார் தஞ்சை புதுக்கோட்டை சாலையில் நெல் சேமிப்பு கிடங்கை நோக்கி ஆட்டோவை திருப்ப முயன்றார் அப்போது புதுக்கோட்டை பகுதியில் இருந்து வந்த கார் ஒன்று ஆட்டோ மீது மோதியதும் பலத்த சேதம் அடைந்தது இந்த விபத்தில் சித்ராதேவி மற்றும் அவருடைய பேரன் ஆகிய இரண்டு பேரும் ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர் உடனே அக்கம் பக்கத்தினர் அவர்கள் இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் அங்கு இரண்டு பேரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை சூரிய தேவ பாண்டியன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர் சித்ராதேவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது குறித்து சின்னையன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via