ஏரியில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பலி

by Editor / 07-09-2021 03:05:31pm
ஏரியில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சித்தூரில் உள்ள ஏரியில் இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மிதந்துள்ளது. தகவலறிந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து சிறுவர்களின் சடலங்களை மீட்டுள்ளனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த சிறுவர்கள் சங்கராபுரத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ஜெகதீஸ்வரன் (10) என்றும் வெங்கடேஷ் என்பவரின் மகன் கார்த்திக் என்றும் தெரிய வந்துள்ளது. இருவரும் தங்களது மகன்களை காணவில்லை என நேற்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

வெங்கடேஷ் என்பவரின் மகளுக்கு உணவு கொடுப்பதற்காக இரண்டு சிறுவர்களும் நேற்று பள்ளிக்கு சென்றதாகவும் அவர்கள் வீடு திரும்பவில்லை என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் பேரில், சிறுவர்களை தேடும் போது தான் ஏரியில் அவர்களது சடலங்கள் கிடைத்துள்ளது. உணவு கொடுத்துவிட்டு சிறுவர்கள் இருவரும் ஏரிக்கு சென்றதும் நீந்த முடியாமல் ஏரியில் மூழ்கி உயிரிழந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

 

Tags :

Share via