ஹெல்மெட் அணியாமல் போன போலீஸ்காரருக்கு ரூ.100 பைன்!
சென்னை பாடி மேம்பாலத்தில் இருந்து அண்ணா நகர் ஆர்டிஓ அலுவலகம் நோக்கி செல்லும் வழியில் காவலர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற சமூக சேவகரான காசிமாயன் என்பவர், காவலரிடம் ஹெல்மெட் அணியாமல் ஏன் செல்கிறீர்கள்? என்று கேட்டார்.
இதற்கு, அந்த போலீஸ்காரர் நான் ஹெல்மெட் போடுறேன். இல்ல போடாமல் போறேன். அதைப்பற்றி உனக்கென்ன. உனக்கு ஏதும் பிரச்னையா? என்று கேட்டு காசிமாயனுடன் வாக்குவாதத்தில் ஈடுட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காசிமாயன் வெளியிட்ட பதிவில் ஹெல்மெட் அணியாமல் சென்ற காவலர் ஆபாசமாக திட்டியதாகவும் அவர் மீது டி.ஜி.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில், போலீஸ்காரர் யார்? என்பதை அடையாளம் கண்டுள்ள சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் அவருக்கு அபராதம் விதத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Tags :