32 பிணங்களை ஒரே நேரத்தில் புதைத்ததால் பரபரப்பு
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் அடையாளம் தெரியாத சடலங்கள் பெயர் தெரிந்த சடலங்கள் என 32 பிணங்கள் கடந்த சில மாதங்களாக உள்ளன இந்த உடல்களுக்கு யாரும் உரிமை கோராவிட்டால் ஒரு வாரத்தில் அடக்கம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது ஆனால் யாரும் உரிமை கோரவில்லை இதையடுத்து 32 உடல்களையும் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது இதையடுத்து தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் போலீஸ் ஏட்டு ரகுநாதன் ஆகியோர் சேர்ந்து அனாதையாக இருந்த 32 உடல்களையும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சாந்திவனம் சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.அங்கு பொக்லின் எந்திரம் மூலம் ராட்சத குழி தோண்டப்பட்டு அதில் 32 உடல்களும் அடுக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன அங்கு இறந்தவர்களுக்கு சடங்கு சம்பிரதாயங்கள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.
Tags :