அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் அரசு மருத்துவமனையில்

by Staff / 10-10-2022 01:38:43pm
 அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் அரசு மருத்துவமனையில்

கும்பகோணம் அருகே கோவிலாச்சேரி புறவழிச்சாலையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் நோக்கி அரசு பஸ்வந்து கொண்டு இருந்தது. அப்போது பஸ் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நான்கு வழி பாதையின்சாலையோரம் இருந்த வாய்க்கால் மதகு கட்டையில் மோதி கவிழிந்தது. இதில் பேருந்தில் வந்த பெண்கள் உட்பட 15 பயணிகள் காயமடைந்தனர். இதில் பஸ் டிரைவர் கர்ணாமூர்த்தி, நடத்துனர் கார்த்திகேயன் உட்பட 10 நபர்கள் பலத்த காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த சோழபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சோழபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via