கொதிக்கும் எண்ணெயில் விழுந்து வியாபாரி பலி
தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் வைகறை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது40). இவர் அதே பகுதியில் மீன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் தான் வழக்கமாக செல்லும் டீ கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென கால் வழுக்கியதில் அருகில் கொதித்துக்கொண்டிருந்த எண்ணெய் பாத்திரத்தில் விழுந்து அலறி துடித்துள்ளார். இதைத் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் பலத்த தீக்காயம் அடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Tags :