5 பெண்களை திருமணம் செய்த பலே வங்கி மேலாளர்

by Staff / 13-10-2022 01:15:13pm
5 பெண்களை திருமணம் செய்த பலே வங்கி மேலாளர்

56 வயதான பொதுத்துறை வங்கி மேலாளர் மீது, கிணச்சேரி கணியம்குன்னம் சிலங்காவீடு கே.சலினா, கோழிக்கோடு பாலத்துப்பரம் சஃப்ரினா பைத்தில் சஃப்ரினா ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் குற்றம்சாட்டினர்.கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி தனது முந்தைய திருமணங்களை மறைத்து, தனது குடும்பத்தினரையும், தன்னையும் தவறாக வழிநடத்தி ஏமாற்றி திருமணம் செய்ததாக சஃப்ரினா கூறினார்.

சில காலம் தன்னுடன் தங்கியிருந்து, பல்வேறு காரணங்களை கூறி சுமார் 22 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றதாக சலீனா கூறியுள்ளார். மேலும் விசாரணையில், அவருக்கு நான்கு முறை திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிய வந்ததாக செவிலியரான சலீனா தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து 2021ல் கோங்காடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையில், இதேபோல் ஏமாற்றப்பட்ட கோழிக்கோடு பாலத்துபரத்தை சேர்ந்த சஃப்ரினா, சலீனாவிடம் வந்து நடந்ததை கூறியுள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதற்காக தன்னை திருசினப்பள்ளிக்கு அழைத்துச் சென்றதாகவும், இந்த உறவில் ஐந்து வயது மகன் உள்ளதாகவும் சஃப்ரினா கூறினார்.

பின்னர் சஃப்ரினாவை பல்வேறு காரணங்களுக்காக அடித்து துன்புறுத்தியும், மிரட்டியும் வந்ததாக கூறினார். இதுகுறித்து தமிழக காவல்துறை மற்றும் கேரள மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தும், குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மற்ற பெண்கள் மீண்டும் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காகவே ஊடகங்கள் முன் வருகிறோம் என இருவரும் தெரிவித்தனர்.

சலினா அளித்த புகாரின் பேரில் நவம்பர் 27, 2021 அன்று கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டதாக கோங்காட் போலீஸ் எஸ்ஹெச்ஓ வி.எஸ். முரளிதரன் தெரிவித்தார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவத்தில் பாலக்காடு ஜூடிசியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எஸ்எச்ஓ தெரிவித்தார்

 

Tags :

Share via