"கை"ப்பற்றப்போவது யார்..?

by Editor / 19-10-2022 08:38:27am

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்தலுக்கான தேர்தலில் அந்த கட்சியின் மூத்த தலைவர்களான சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜூன் கார்கே போட்டியிட்டனர். காங்கிரஸ் தலைவர் தேர்தல் கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 17) நடைபெற்றது. நாடு முழுவதுமாக 68 தேர்தல் பூத்துகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 9,915 வாக்காளர்களில் 9,500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்தனர். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இன்று காலை 10 மணிக்கு தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் பணி தொடங்குகிறது. க, 24 ஆண்டுகளில் முதல் முறையாக காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். அது மல்லிகார்ஜூன் கார்கேவா அல்லது சசி தரூரா  என்பது இன்று தெரிந்துவிடும். 

 

Tags :

Share via