இன்னும் 3 ஆண்டுகளுக்கு விரைவு சிறப்பு நீதிமன்றங்கள்

by Staff / 30-11-2023 11:39:32am
இன்னும் 3 ஆண்டுகளுக்கு விரைவு சிறப்பு நீதிமன்றங்கள்

பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு விசாரிக்க விரைவு சிறப்பு நீதிமன்றங்களைத் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 1,023 நீதிமன்றங்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. அவற்றில் 761 நீதிமன்றங்கள் 2019 முதல் செயல்படுகின்றன. இவை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு, மீதமுள்ள நீதிமன்றங்களை அமைக்க மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படும். இதன் மூலம் போக்சோ, இதர பாலியல் வழக்குகள் விசாரித்து விரைந்து நீதி வழங்கப்படும்.

 

Tags :

Share via