75-வது சுதந்திர தினம் - நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார்

by Admin / 14-08-2021 12:18:39pm
75-வது சுதந்திர தினம் - நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார்

 

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.

நாடு முழுவதும் வரும் 15-ம் தேதி 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று இரவு 7 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

முதலில் இந்தியிலும், அதைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் அவர் உரையாற்றுகிறார். அதன்பின், அந்தந்த மாநில மொழிகளில் ஜனாதிபதி உரை மொழி மாற்றம் செய்யப்பட்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

 

Tags :

Share via