மகன் கண் முன்னே தாய் பலி
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மேல தெருவை சேர்ந்தவர் பரமசிவம் மனைவி பாண்டியம்மாள் (46). இவர் நேற்று தனது மகன் விஜய கண்ணனுடன் (22) பைக்கில் எட்டையாபுரம் வந்து கொண்டிருந்தார். தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேலக்கரந்தை அருகே வரும்போது பைக் நிலை தடுமாறியதில் பாண்டியம்மாள் பைக்கில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து மாசார்பட்டி இன்ஸ்பெக்டர் அனிதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.
Tags :